title

ஒரு அழகான கிராம், பசுமையான வீடு, வீட்டில ஒரு அம்மா, அப்பா அழகான இரண்டு சுட்டி குழந்தைகள் இருந்தார்கள். தினமும் மாலை வேளையில் வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் சேர்ந்து பக்கத்தில் இருக்கிற ஒரு மரத்தடியில் ஆடிப்பாடி இயற்கையை இரசித்து பொழுதுபோக்குவார்கள். இப்படி ஒரு நாள் விளையாடிகிட்டு இருக்கும் போது ஒரு பறவை அடிபட்டு அந்த சுட்டிப்பையன் மடியில வந்து விழுந்திடுச்சு. பையன் பயத்தில் ஒரு நிமிடம் துடித்து போயிட்டான். அம்மா வீட்டிற்குள் சென்று மருந்தும் அதை கட்டுறதுக்கு துணியும் எடுத்து விட்டு வாராங்க. அம்மாவும் அப்பாவும் சேர்ந்து பறவைக்கு முதலுதவி செய்து பறவையை பத்திரமா படுக்க வைக்கிறாங்க. அந்த பையனுக்கு மனசுல ஒரே குழப்பம். இரவு படுக்கைக்கு செல்லும் முன்னர் பறவையை போய் பார்க்கிறான் அந்த பையன் பக்கத்தில் படுத்திருந்த அம்மாகிட்ட கேட்கிறான், பறவையை திறந்து விட்டா நம்ம கண்ணுல பட்டு சாகாதுல்ல.

18